காமராஜர்
சீரிய
செயல்களால் மக்கள்
சிந்தையில் நிறைந்தவரே!
நீர் உதிர்த்ததாய்
எங்கள் உதிரத்தில் கலந்த
வார்த்தைகள்
இரண்டு மட்டுமே
அவை,
“ஆகட்டும், பார்க்கலாம்“
ஆனால் - உம்
செயல்கள் எண்ணிலடங்காதவை!
எண்ணி எண்ணி வியக்க வைப்பவை!
கர்மவீரரே
நீர் கட்டிய அணைகள்
உம் புகழொளி வீசும்
அணையா விளக்குகள்!
நீர் எழுப்பிய பள்ளிக்கூடங்கள்
உம் புகழ் பாடும் பாமாலைகள்!
நீர் தொடங்கிய தொழிற்கூடங்கள்
எம்மைக் காக்கும் நிழற்கூடங்கள்!
இந்தியாவின் தலைமையை
இருமுறை நிர்ணயித்தவரே!
தமிழகத்தின் தலையெழுத்தை
தங்கத்தில் பொறித்தவரே!
என்றும் கரை படியாத கடவுளே!
நீர் கட்டியவையும், நீர் தீட்டியவையும்
இன்றும் எம்மை வாழ்வித்துக் கொண்டிருக்கின்றன
அட்சய பாத்தியரமாய்!
மா. கணேஷ்
9976123132
Comments
Post a Comment