காமராஜர் சீரிய செயல்களால் மக்கள் சிந்தையில் நிறைந்தவரே! நீர் உதிர்த்ததாய் எங்கள் உதிரத்தில் கலந்த வார்த்தைகள் இரண்டு மட்டுமே அவை, “ஆகட்டும், பார்க்கலாம்“ ஆனால் - உம் செயல்கள் எண்ணிலடங்காதவை! எண்ணி எண்ணி வியக்க வைப்பவை! கர்மவீரரே நீர் கட்டிய அணைகள் உம் புகழொளி வீசும் அணையா விளக்குகள்! ...