Skip to main content

Posts

Showing posts from December, 2022

குமரி அன்னை - கவிதை

குமரி அன்னை வான்புகழ் வளர் தமிழின் இருப்பிடமாம் !  தேன் சுவை தெய்வத் திருக்குறளின் பிறப்பிடமாம் !  அலைகடலை ஆடையாய் அணிந்தவளாம் !  கலைக்கடலில் கைதேர்ந்த கலைமணியாம் !  உதித்தோங்கும் பரிதியும் குமரியிலே உயர் அழகாம் !  முத்தமிழும் முக்கடலும் சேர்ந்தொழுகும் பேரழகாம் ! தாடகமலையும், காற்றாடி மலையும், மருந்து வாழ் மலையும்  குமரித்தாய்க்கு அரண்களாம் ! பரளியாறு, கோதையாறு, பழையாறு அன்னைக்கு வளம் சேர்க்கும் ஆறுகளாம் !  குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஒருங்கிணைந்த நாடு நாஞ்சில் நாடாம் ! தென்னையும் வாழையும் ரப்பரும் எம் தாயின் செழிப்பின் அடையாளங்களாம் !  எழுத்தறிவில் உயர்ந்தோங்கி வழிகாட்டும் ஒளி விளக்காம் !  கவிமணியும் செய்குத்தம்பி பாவலரும் இவள் உதிரத்து  உயிர்த்தெழுந்த நற்றமிழ் வித்துக்களாம் !  கலை உலகில் கோலோச்சிய கலைவாணர்   குமரி அன்னையின் பேர் சொல்லும் பிள்ளையாம் !  கல்வி, கலை, அறிவியல், ஆன்மிகம், தொழில்நுட்பம் என  அனைத்திற்கும் முன்னோடியாம் !  அன்னை குமரி என்றும் நம் உயிர்நாடியாம் ! மா. கணேஷ் தமிழாசி...